எஸ்.ஐ.யின் பிறப்புறுப்பை அறுத்த காவலர் – தெலங்கானாவில் பரபரப்பு….

தெலங்கானாவில் கள்ளக்காதலால் காவல் உதவி ஆய்வாளரின் பிறப்புறுப்பை அறுத்த காவலரை தீவிரமாக தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வருபவர் இப்தார் அகமத். அதே காவல் நிலையத்தில் சகுந்தலா என்பவர் காவலராக வேலை செய்து வருகிறார். சகுந்தலாவின் கணவர் ஜெகதீஷ் வேறொரு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு காவல் ஆய்வாளர் இப்தார் அகமத் அவருடைய காரில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கவனித்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை சிகிச்சைக்காக மகபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளரின் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் ஜெகதீஷ் அவருடைய மனைவியான காவலர் சகுந்தலா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை தாக்கியதாகவும் அப்போது ஜெகதீஷ் காவல் ஆய்வாளரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சகுந்தலா, இப்தார் அஹமத் ஆகியோருக்கு இடையே ரகசிய தொடர்பு இருந்ததும் இதனை கண்டித்த ஜெகதீஷ் சகுந்தலா மூலம் இப்தார் அஹமத்தை வரவழைத்து கடுமையாக தாக்கி அவருடைய ஆணுறுப்பை சிதைத்தார் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஜெகதீஷ், சகுந்தலா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த தெலங்கானா போலீசார் அந்த இருவரையும் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

எஸ்.ஐ.யின் பிறப்புறுப்பை அறுத்த காவலர் – தெலங்கானாவில் பரபரப்பு….

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச