திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். இனிவரும் காலங்களிலும், அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்து தான் பயணிப்போம். நாங்கள் என்டிஏ கூட்டணியில் இல்லை. எங்களை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






