ஓமந்தூரார் மருத்துவமனையில் “கோவிட் 19 நூல்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை:
சென்னை அரசு ஒமந்தூரார் மருத்துவ கல்லூரி பொது மருத்துமனையில் நேற்று செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் மற்றும் கோவிட் 19 பற்றிய நூல் அறிமுக விழா கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தும், நூலை வெளியிட்டும் பேசினார்.
அப்போது, கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் கோவிட் 19 காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றவர் எனக்கூறி வாழ்த்தி பேசினார்
மேலும், கோவிட் 19ஐ கட்டுபடுத்திவிட்டோம் என்று நினைத்தோம். ஆனாலும் கட்டுபடுத்த முடியவில்லை. வேறு ரூபத்தில் வந்துகொண்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருபவர்களையும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
நான் எதிர்கட்சியாக இருக்கும் போது தடுப்பு ஊசி போடுவதற்காக நானும் என் மனைவியும் ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். எங்களை ஓமந்தூரர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி எங்களிடம் கனிவோடு நடத்து கொண்டார். அவர் அறையிலேயே எங்களுக்கு ஊசி போட்டார்.
17 விதமான மருத்துவ திட்டம் இவர் முன்னிலையில் இந்த மருத்துவமனையில் நடந்தது. இவர் பணிஒய்வு பெருகிறார். இவர் கோவிட் காலத்தில் செய்த அயராத பணிகளை அசை போட்டுக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு இவர் சிறப்பாக செயல்பட்டார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.
விழாவில் மருத்துவக்கல்வி இயக்குனர் மரு.ஆர்.சாந்திமலர், முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறையின் துணை ஆசிரியர் மரு.விநாயக் எஸ்.ரெங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஏற்புரை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

ஓமந்தூரார் மருத்துவமனையில் “கோவிட் 19 நூல்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்