கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம்

எது பகுத்தறிவு?

பகுத்தறிவு என்பது நன்மை எது? தீமை எது என்று பகுத்து அறியும் அறிவு என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய உயிர் வாழ்க்கைக்கு நன்மை பயக்கக்கூடியது எது? தீமை பயக்கக்கூடியது எது என்று பகுத்து அறிந்து அந்த அறிவின் வழி செயல்படுகின்ற காரணத்தாலேயே அவை உலகில் அழிந்து போகாமல் நிலைநிற்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு நாயை எடுத்துக்கொள்வோம். அது தான் உண்ணத்தக்கப் பொருள் எது, தள்ளத்தக்கப் பொருள் எது? என்பதைப் பகுத்து அறிந்து உண்ணத்தக்கப் பொருளை மட்டுமே உண்ணுகின்றது. தள்ளத்தக்க பொருளை பகுத்தறிந்து தள்ளிவிடுகின்றது. ரொட்டியைப் போன்று வண்ணத்திலும், வடிவிலும் மெழுகினால் செய்து நாய்க்குக் கொடுத்தால் அது ரொட்டி எது? மெழுகு எது என்று பகுத்து அறிகின்ற அறிவினால் மெழுகைத் தள்ளி விடுகின்றது. ரொட்டியை மட்டுமே ஏற்று உண்ணுகின்றது.

அவ்வாறே ஓரறிவு உயிரினங்களாகிய மரம், செடி, கொடி, புற்பூண்டு முதலியன தம்முடைய உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேரை வளரச் செய்கின்றன. மற்ற மரங்களிடையே வளரும் தென்னை மரம், சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்வதற்காக மிகுந்த முயற்சி எடுத்து சூரிய ஒளி கிடைக்கும் திசையை நோக்கி வளைந்து, வளைந்து வளர்ந்து செல்லுகிறது. இவையெல்லாம் பகுத்து அறியும் அறிவோடு சேர்ந்த அறிவு இல்லையா? தங்கள் வாழ்வுக்கு நன்மையானது எது? தீமையானது எது? என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதால் தானே இவ்வாறு செயல்புரிகின்றன என்று நாம் எண்ணலாம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கின்றது என்பதைக் கேள்விக்குறி ஆக்கலாம்.

மனிதனுக்கு ஆறாவது அறிவுக்குரிய உறுப்பும் இல்லை, ஆறாவது அறிவுக்குரிய சிறப்பும் இல்லை என்றால் மற்ற ஐந்தறிவுடைய விலங்குகளைப் போன்று இவனும் ஓர் ஐந்தறிவுடைய விலங்குதானா என்ற கேள்வி எழும்புகின்றது. ‘Man is a Social Animal’ என்ற முதுமொழி அவனை ஒரு விலங்காகவே காட்டுகின்றது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்