கர்ப்பிணி மனைவியை கணவரே கார் ஏற்றி கொல்ல முயற்சி….

பாகலூர்: பெங்களூரு பாகலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், சைத்தன்யா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. திருமணமான நாள் முதல் சைத்தன்யா, தனது மாமியாரை குறை கூறி வந்துள்ளார். மேலும் அவருடன் அவ்வப்போது வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது கணவரை பிரித்து, தனிக்குடித்தனத்திற்கும் அழைத்து வந்துள்ளார். தனது மனைவி, பெற்ற தாயுடன் தகராறு செய்து தன்னை பிரித்து அழைத்து வந்ததால், அரவிந்த் மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து அவர் தனது மனைவியிடம் விவகாரத்து கேட்டார்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். மேலும் தொடர்ந்து தனது கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையே சைத்தன்யா, கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சைத்தன்யா சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டர் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் சைத்தன்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, இந்த வழக்கு பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 6 மாதங்கள் கழித்து, போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடித்தனர்.

மேலும் கார் டிரைவரான உதய் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சைத்தன்யாவின் கணவர் தான் அவரை கார் ஏற்றி கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அரவிந்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சைத்தன்யா, அரவிந்தின் தாயை கொடுமைப்படுத்தியதுடன், தன்னையும் பிரித்து தனிக்குடித்தனம் அழைத்து வந்துள்ளார். மேலும் விவாகரத்து கேட்டும் சைத்தன்யா கொடுக்காததால் 6 மாத கர்ப்பிணி என்றும் கூட பாராமல் அவரை கார் ஏற்றி கொலை செய்ய அரவிந்த் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனியாக ஸ்கூட்டரில் வந்த தனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அரவிந்த்தும் காரில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் கணவர் அரவிந்த் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

கர்ப்பிணி மனைவியை கணவரே கார் ஏற்றி கொல்ல முயற்சி….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத