மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒற்றுமை என்ற அமைப்பின் ஒரு அங்கமாக மாணவர்களி இடையே காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருபுவனை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு திருவண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ-மாணவி கள் இந்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






