புதுடெல்லி:
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “‘Jo Khelega Woh Khilega’’ விளையாடுபவர்கள் பிரகாசிப்பார்கள். தொடர்ந்து நமது பாரதத்தை உற்சாகப்படுத்துங்கள். பாரத் மாதா கி ஜெய்” என பேசியுள்ள பிரதமர் மோடி அவர்களை வாழ்த்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – 2026 ஜூலை 23 ஆம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது. இந்த ஆண்டு மொத்தமாக 74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் உட்பட 191 பேர் பங்கேற்றனர்.
விளையாட்டின் முடிவில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தை பெற்ற இந்திய வீரர்கள், நம் நாட்டை பதக்க மழையில் நனைய வைத்தனர். (மொத்தம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்)
இந்த வெற்றிக்கு குத்துச்சண்டையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது, இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றனர். இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில் ஒரே தொடரில் குத்துச்சண்டையில் அதிக தங்கப்பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையையும் இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களை, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்
சென்னை:கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில்






