கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்த அவலம்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போசம்பள்ளி அருகே கொடமண்டப்பாடியை சேர்ந்தவர் ஷகிலா பானு. இவரது மகன் முபாரக். இவர்களுக்கு சொந்தமாக வீடு அந்த பகுதியில் உள்ளது. இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு சிவன் என்பவரிடம் வீட்டு மனையை அடகு வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இதற்கிடையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு முடக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் 2 ஆண்டுகள் வட்டிக்கு பணம் கட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த சிவன், 10 பேருடன் ஷகிலா வீட்டுக்கு சென்றார். அங்கு வட்டி கொடுக்கும்படி கேட்டார். அவர் முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த சிவன், பொக்லைன் இயந்திரம் மூலம் ஷகிலா பானுவின் வீட்டை இடித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டை இடித்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

கிருஷ்ணகிரியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் வீட்டை இடித்த அவலம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச