குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் இலங்கை அதிபர்..

இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (21.07.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற குடியரசுத் தலைவர், “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் இந்த பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.

கடந்த ஓராண்டில் இலங்கையின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க இந்தியா வழங்கிய பன்முக ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். தேவையான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இரு நாடுகளின் கூட்டுச் செயல்பாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவும் இலங்கையும் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவின் தலைமையின் கீழ் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் இலங்கை அதிபர்..

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்