சென்னை:
வழிப்பறி, திருட்டு உள்ளிட் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் காவல் சரக பகுதயில் வழிப்பறி வழக்கில் சென்னை புலியந்தோப்பு பார்க்கிங் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 22), மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் திருட்டு வழப்பறி சம்பவங்களில் மணலி சீனிவாசன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் என்கிற டேவிட் (22), மணலி பி.ஆர்.கெ.ஷர்மா நகரை சேர்ந்த தேவேந்திரப்பிரசாத் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருநின்றவூர் காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் சென்னை கொழுமுடிவாக்கம் மங்கலாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற பல்லு விக்னேஷ் (26) , கன்னக்களவு, வழிப்பறி வழக்கில் சென்னை ஷெனாய் நகர், அருணாச்சலம் 3வது தெருவை சேர்ந்த வினோத் என்கிற காரமணி (22)ஐயும் கைது செய்தனர்.
இதேபோல் கொரட்டூர் காவல்யத்தில் பொது அமைதிக்கு பங்கம்விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக காவங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்த சிவகுரு (26) என்பவரையும், சென்னை மதனங்குப்பம் அம்பேத்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பிரவீன் (24) ஆகியோர் 7 பேர் மீதும் குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த 7 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டில் இதுவரை 98 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 92:அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் விளக்கம்:ஒருவர் தன்னைக்






