கோவை: 900 பவுன் நகை மோசடி: டாக்டர் கைது

கோவை:
கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது 2-வது மகள் கோவையில் மருத்துவராக உள்ளார்.
இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த மருத்துவர் விக்னேஷூடன், 2-வது திருமணம் நடந்தது.
இதற்கிடையே மருமகன் விக்னேஷிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வீட்டில் நகை வைத்திருந்த லாக்கரின் சாவியை சண்முகபாண்டியன் ஒப்படைத்தார்.
இதன் பிறகு சில மாதங்களில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் விக்னேஷிடம் அளித்த லாக்கர் சாவியை சண்முகபாண்டியன் திரும்பப்பெற்று லாக்கரை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் இருந்த 1,000 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விக்னேஷிடம் அவர் கேட்டபோது, 100 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துவிட்டு, 900 பவுன் நகைகளை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து விக்னேஷ், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் சண்முகப்பாண்டியன் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மருத்துவர் விக்னேஷை நகை மோசடி செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

கோவை: 900 பவுன் நகை மோசடி: டாக்டர் கைது

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை