சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனத்தையொட்டி,  பொன்னம்பல மேட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்,  மகர விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.  முன்னதாக கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.  பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக  டிசம்பர் 31ம் தேதி நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அந்தவகையில் இந்த ஆண்டு  மகர ஜோதி நிகழ்வானது  நாளை மாலை நடக்க இருக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய் காட்சி அளிப்பார்.

அப்போது பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு, சரண கோஷம் எழுப்புவர். மகர ஜோதியை ஒட்டி கடந்த 2  நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருமுடிக்கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள்  மகர ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர். நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.   இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் உள்ளது. ஏற்கனவே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால், நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கென  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அந்தவகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் நேரத்தில்  சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மகரஜோதியை ஒட்டி,  சன்னிதானம் மற்றும் பொன்னம்பலமேடு பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் , சன்னிதானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். அந்த ஆபரணங்கள் எடுத்து வரப்படும்  பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர். மகர ஜோதியன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அதேநேரம், சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து காட்சி தருவார்.  இந்த இரு நிகழ்வுகளையும் காண  பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட