சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

கயானா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
3 வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, சூர்யகுமார் யாதவ் 83 ரன், திலக் வர்மா 49 ரன் (நாட் அவுட்) ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். இவர் ரோகித், கோலியுடன் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் 44 பந்தில் 83 ரன் அடித்தார். இதில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ரோகித் சர்மா (182 சிக்சர்), விராட் கோலி (117 சிக்சர்) உள்ளனர். சூர்யகுமார் யாதவ் (101 சிக்சர்) 3வது இடத்திலும், கே.எல்.ராகுல் (99 சிக்சர்) 4வது இடத்திலும் உள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்