சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார். ஏற்கனவே கத்திப்பாராவில் மேம்பாலம் மற்றும் இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் உள்ள நிலையில், அதிநவீனச் சமச்சீர் காண்டிலீவர் (Balanced Cantilever) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சவாலான கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பை முதலமைச்சர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






