சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் சாலை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தும் இந்த வழியாக தினமும் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகங்கள் ஒட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து ஏற்கனவே போக்கு வரத்து போலீசார் இடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என கூறப்படுகிறது
இந்தநிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் இப்ராஹிம் (30) தனது காரில் இன்று காலை 5:30 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு கார் வேகமாக வந்ததால் மோதலைத் தவிர்க்க வலது புறமாக காரை வேகமாக திருப்பிய போது அப்போது, எதிர்பாராத வேலையில் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
தடுப்புகளில் கார் மோதியதால், பள்ளத்திற்குள் முழுவதுமாக விழாமல் தொங்கிய நிலையில் நின்றதால் பயத்தில் கார் ஒட்டுனர் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு இதனை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காப்பாற்றினார்கள் நல்ல வேலை ஓட்டுநர் இப்ராஹிம் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை மற்றும் பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் நீண்ட நேரம் போராடி காரை மீட்டெடுத்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 73: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. பொருள்உயிரும் உடலும்போல்





