சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த அவர், யானைகள் பராமரிப்போருடன் கலந்துரையாடினார். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தார். இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். வரவேற்புக்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கி ஓய்வெடுத்தார். இந்நிலையில், இன்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தார். அங்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






