அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

டன் கணக்கின் மாயமான நெல் மூட்டைகள் : தவறு செய்தவருக்கு தண்டனை உறுதி என அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக திறந்த வெளி நெல் கிடங்கு தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் உள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் மூட்டைகள் மாயமானதாகப் புகார் எழுந்தது. எனவே, நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள்  கடந்த சில நாட்களாகத் தருமபுரி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

“தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22,273 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 டன் இருப்பு உள்ளது. இதில்இருந்துதான் 7 ஆயிரம் டன் இருப்பில் இல்லை என்று ஒரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகச் செய்தி வந்தது.

இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநரையும் அந்த கிடங்கில், 100 சதவீதம் தணிக்கை செய்து உண்மைத் தன்மையை அறிய உத்தரவிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு, வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்துவரும் முதல்வர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்ற பொறாமையின் உச்சக்கட்டத்தில், செய்தியை ஆராயாமல் வசவுகளை எதிர்க்கட்சித் தலைவர் அள்ளித் தெளிக்கிறார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

டன் கணக்கின் மாயமான நெல் மூட்டைகள் : தவறு செய்தவருக்கு தண்டனை உறுதி என அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்