டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இன்று மாலை 6.30 மணிக்குள் மூடுமாறு நியூடெல்லி வர்த்தகர் சங்கம் அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போராட்டத்தின் போது தேவையற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கவும், வணிக வளாகங்கள் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது. தலைநகரின் முதன்மை வர்த்தக மையமான கன்னாட் பிளேஸில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






