அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வந்த இந்தியா…!

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு அடுத்த போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் 2019-2020ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 எனவும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2021-2022ல் இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் பாதி புள்ளிகளே கிடைத்தன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகள் 121-ல் இருந்து 116 ஆக குறைந்துள்ளது.

இந்தியா 2019-ல் நியூஸிலாந்து அணியிடம் 2-0 என தோல்வி அடைந்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது. மற்ற அணிகளின் இடங்களில் எந்தவித மாற்றங்களும் இல்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் வந்த இந்தியா…!

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்