தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 (Right to Information Act, 2005) : இச்சட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மக்கள் தேவையான தகவல்களை உரிமையுடன் அறிந்து கொள்க உருவாக்கப்பட்டதாகும். இந்திய நாடாலுமன்றத்தால் 2004 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அறிமுகம் படுத்தப்பட்டு 2005 மே 11-ல் மக்கள் அவையிலும், 2005 மே – 12ல் மாநில அவையிலும் நிறைவேற்றப்பட்டது.
2005 ஜூன் 15-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு 21-ல் அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததாகும்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திற்கும் இச்சடம் பொருந்தும். இச்சட்டத்தின் முறையே இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள் ஆவர். அதாவது இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒரு பொது அதிகாரத்தில் இருந்து தகவல்களைக் கேட்கலாம். உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பொது அதிகாரமும் தங்கள் பதிவுகளை பரந்த அளவில் பரப்புவதற்கும், சில வகை தகவல்களை முன்கூட்டியே கணினிமயமாக்குவதற்கும் இந்த சட்டம் தேவைப்படுகிறது, இதனால் குடிமக்களுக்கு முறைப்படி தகவல்களைக் கோர குறைந்தபட்ச உதவி தேவைப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் உள்ள அதிகாரிகள் நீதித்துறை அதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘பேச்சு சுதந்திரம்’ என்ற அடிப்படை உரிமையை பலப்படுத்தும் பொருட்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது. தகவல் உரிமை என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை குறிப்பதாகும். இந்த தகவல் உரிமைச் சட்டம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 பற்றிய மேல பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.






