தனியார் சொகுசுபேருந்தில் தீ விபத்து – ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது….

ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நேற்று நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 25 பயணிகள் உயிர்தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் செல்போன்கள் கருகியது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 25 பேர் பயணித்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பித்ரகுண்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்பகுதியில் திடீரென குபுகுபுவென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளை உஷார்படுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் அலறியடித்துகீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து காட்ஜூமல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். டிரைவரின் சமார்த்தியத்தால் அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர். இருப்பினும் பஸ்சில் இருந்த அவர்களது உடமைகளும் தீயில் கருகியது. அதில் பலரது பைகள் மற்றும் சூட்கேசுகளில் விலைமதிப்புமிக்க நகை, பணம், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

தனியார் சொகுசுபேருந்தில் தீ விபத்து – ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத