நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 16, 17) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

நேற்று 17 தமிழக நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி, திருத்தணியில் 106, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கரூர் பரமத்தியில் தலா 105, பரங்கிப்பேட்டையில் 104, ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி, புதுச்சேரி, கடலூரில் தலா 103, தஞ்சாவூர், பாளையங்கோட்டையில் தலா 102, காரைக்கால், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், “தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தவும். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணவேண்டும். காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.” என அறிவுறுத்தி உள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக