தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறன் மேம்படுத்தப்பட்ட புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு மின்தடை தொடர்பான புகார் அழைப்புகள் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் : பெருமழைக்குள் தடுப்பு நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப் பேட்டையில் இன்று மாலை லேசான மழை பெய்தது. அரை மணி

தூத்துக்குடியில் கோவில் இடிப்பு: கிறிஸ்தவ நிறுவனத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் கோஷம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் ரயில் நிலையம் அருகில் விநாயகர்

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்