அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு துளிர் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

தமிழக யானைகள் முகாம் பணியாளர்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள 2 யானைகள் முகாமில் பணியாற்றும் 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘ஜிலீமீ ணிறீமீஜீலீணீஸீt கீலீவீsஜீமீக்ஷீமீக்ஷீs’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியர் சந்தித்தனர். இவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழக வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழகத்தில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூ. 8 கோடி செலவில் அமைக்கப்படும்.
முதல்வரின் 2022-ம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்

தமிழக யானைகள் முகாம் பணியாளர்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில்,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் வடக்கு

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம்