சென்னை:
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்துள்ளார். கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்து பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் கொண்டு வந்து உரையாற்றினார். இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த தீர்மானம் மீது பேசிய அமைச்சர் வன்னி, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஆளும் கட்சி வரிசையில் தான் கைத்தட்டி வரவேற்றார்கள், எல்லோரும் வரவேற்க வேண்டும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான தீர்மானம் என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய வன்னி அரசு எல்லோரும் வரவேற்றால் மகிழ்ச்சி. நான் குறையாக சொல்லவில்லை என்றார்.

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்
சென்னை:கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில்






