தஞ்சாவூர்:
விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம் காட்டி வருவதுடன், காவிரியில் தமிழகத்துக்கு பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களில் இன்று (ஆக.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க பங்கேற்றனர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக வெற்றிக் கழகம் அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான






