புதுடெல்லி:
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 133 பேர் இந்தியர்கள்.
இதுகுறித்து இந்திய விமானப்படை சமூக வலைதளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு சி-130ஜே வானூர்தி மூலம் சுமார் 10 டன் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.
இதோடு சி-17 மற்றும் சி-130 வானூர்தி மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப உள்ளோம். மேலும், மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களும் செல்கிறது என்று அந்த பதிவில் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த நிவாரண பொருட்களும், மருந்துகளும் நேபாளம் சென்றடைந்தது. அதை இந்தியா அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துடன் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இந்தியா துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாளத்துக்கு மேலும் 35 டன் நிவாரணம், மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. ஏற்கனவே இந்தியா அனுப்பிய 10டன் நிவாரண பொருட்கள் நேபாளம் சேர்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக






