சென்னை:
இந்தியன் யூத் டெவலப்மென்ட் சென்டர் மற்றும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் இணைந்து முதலாவது தேசிய அளவிலான சிலம்ப போட்டியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மென்ட் வளாகத்தில் நடத்தியது.
போட்டியை இந்தியன் யூத் டெவெலப்மென்ட் சென்டர் நிறுவனர் மற்றும் சேர்மன் நாஞ்சில் மு.சுரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அனைவரையும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் நிறுவனரும், தலைவருமான எம்.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வி.ராஜா, டி.ராஜவேலு, நாகராஜன், ஜாகோப் நிக்சன், மை பாரத் மாநில இயக்குனர் ஏ. சரவணன், நேமிலி ஊராட்சி தலைவர் அறிவழகன், மாவட்ட இளைஞர் அலுவலர் சஞ்சய் சாந்தகுமார், பாண்டூர் டாக்டர்.ஏ. மோகன் கலை முதுமனி. ஆர். முருககனி ஆசான், அரசு செய்தி ஆசிரியர் (வெப் நியூஸ்) பரமேஸ்வரன். மீடியா செய்தி முகமது அப்துல் காதர், டாக்டர் பி.கே.சரவணன், இணைசெயலாளர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ரீல்ஸ் படுத்தும் பாடு: சட்டமன்ற நிகழ்வு இனி லைவா..? ஜெஸ்ட் டிலோவா…?
சென்னை:தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.






