குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
குறள் விளக்கம்: குணக்குன்றின் உச்சியில் உள்ள கடவுளுடைய மசுனின் கட்டளையை மீறிச் செயல்பட்டு அவருடைய கோபத்திற்கு ஆளாகினவர்கள் அக்கோபத்தை ஒரு நிமிடங்கூடத் தாங்கிக் கொள்ள இயலாது.
திருமறை விளக்கம்: அந்தப்படியே திருமறையும் யோவான் 5:27 “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.” என்றும், அப்போஸ்தலர் 3:23 “அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்” என்றும், சங்கீதம் 2:12 “குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு. அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.





