தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக, பா.ம.க. எதிர்ப்பு

சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யால் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 7.18 விகிதாச்சாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இருப்பினும், இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான பகுதிக்கு மட்டும் அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பா.ம.க.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், தமிழகத்தில் சென்னை என ஒரு மாநகராட்சி தான் இருந்தது, அதற்குப் பிறகு காலப்போக்கில் அடுத்தடுத்த மாநகராட்சிகள் வந்துவிட்டது. கடந்த காலங்களில் தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் தான் இருந்தது. தற்பொழுது பல்வேறு கட்சிகள் உருவாக்கிவிட்டன. உள்ளாட்சிகளில் மறுவரை செய்யப்படுகிறது.
திமுக ஆட்சியில் தொகுதி மறுவரையறை குறித்து பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக தமிழக வெற்றிக்கழகம் திமுக பாமக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். கட்சிகளில் கூட மாவட்டங்கள் பிரித்து பொறுப்புகள் நியமிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் அவர் ஏற்றவாறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்த தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால், 117 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியும். இந்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றார்.

கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: – சென்னை மாநகராட்சி ஆணையாளர்

சென்னை:சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர

‘வந்தே மாதரம்’ சட்ட பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டு சிறை

புதுடெல்லி:‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு சமமான சட்ட பாதுகாப்பு

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக, பா.ம.க. எதிர்ப்பு

கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: – சென்னை மாநகராட்சி ஆணையாளர்

சென்னை:சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர

‘வந்தே மாதரம்’ சட்ட பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டு சிறை

புதுடெல்லி:‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு சமமான சட்ட பாதுகாப்பு