நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை: 2வது நாளாக பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

சேலம்:
சேலம் அருகே மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் ஒருவர், தோல்வி பயத்தால் தனியார் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று மாணவன் சந்துரு பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆத்தூர் போலீஸார் சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆட்சியர் கார்மேகம், எஸ்பி சிவக்குமார், டிஎஸ்பி நாகராஜன், ஆர்டிஓ சரண்யா விடுதி நிர்வாகத்திடமும், மாணவர் சந்துருவின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் உள்ள நிலையில், தனியார் பள்ளியில் இரண்டாவது நாளாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர் சந்துரு இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், தோல்வி பயத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை: 2வது நாளாக பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்