
மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.
சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி





