அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நெற்பயிர்கள் வந்துள்ள விநோத நோயால் 100 ஏக்கரில் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம் குறிச்சி பகுதியில் விநோத நோயால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள், தீயில் கருகியது போல காணப்படுகின்றன. இவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிச்சியில் 400-க்கும் அதிகமான விவசாயிகள் ஆண்டுதோறும் மின் மோட்டார் பயன்படுத்தி 1,000 ஏக்கரில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு கடந்த 40 நாட்களுக்கு முன்பு, நாற்று பறித்து, சம்பா நடவுப் பணியைத் தொடங்கினர். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில், திடீரென பயிர்கள் தீயில் கருகியதுபோல மாற தொடங்கின. இதன்படி, 100 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியுள்ளன.

இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம், பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து, அவர்களின் ஆலோசனையின்படி உரங்கள் தெளித்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே, குறிச்சியில் விநோத நோய் தாக்குதலால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உரம் தெளித்தும் எந்த பயனில்லை:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி வி.குஞ்சிதம் தெரிவித்ததாவது: பச்சை பசேலென வளர்ந்து வந்த நெற்பயிர்கள், அண்மைக்காலமாக தீயில் கருகியதுபோல மாறிவிட்டன. இதுகுறித்து, வேளாண்மைத் துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களது ஆலோசனையின்படி உரங்கள் தெளித்தும் பலனில்லை.

நாற்றுக்காக ரூ.20 ஆயிரம், கருகிய நாற்றுகளை காப்பாற்ற ரூ.20 ஆயிரம் என 40 நாட்களில் இதுவரை ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். பலரும் கடன் வாங்கி சாகுபடியில் ஈடுபட்டதால், பயிர்கள் கருகி வருவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது. தமிழக அரசு, குறிச்சியில் நெற்பயிர் கருகிய வயல்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதுடன், பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் து.சிவவீரபாண்டியன் கூறியது: நெற்பயிரில் நோய் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை பேராசிரியர் கே.ராஜப்பன், உழவியல் துறை இணைப் பேராசிரியர் ஆர்.நாகேஸ்வரி, மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் கே.மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட வயல்களில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், அதிக அளவில் டிஏபி உரங்களைப் பயிருக்குத் தெளித்ததாலும், வயல்களில் பச்சைப் பாசி படர்ந்ததாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த பயிர்களைக் காப்பாற்ற டிஏபி உரம் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்த வேண்டும்.

பச்சைப் பாசியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட்டுடன், 25 கிலோ மணலை சேர்த்து வயலில் சீராகத் தூவ வேண்டும். அந்த வயல்களில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் நீரை, ஆடுதுறையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்து, அந்த முடிவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் சாகுபடி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

குறுவை சாகுபடி முடிந்தவுடன், பசுந்தாள் உரம் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். மேலும், வேளாண்மைத் துறையால் பரிந்துரைக்கப்படும் திரவ நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

நெற்பயிர்கள் வந்துள்ள விநோத நோயால் 100 ஏக்கரில் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்