திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வலையபட்டியை சேர்ந்தவர் ஆசிரியை தேவி (வயது 40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். கருத்து வேருபாடு காரணமாக அவரும் அவர் கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னிடம் டியூஷன் படித்த மாணவருடன் அவர் இரவில் அந்தரங்க பேச்சில் ஈடுபட்டு வருவதாக மாணவரின் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து அந்த மாணவரை கண்காணித்த போது அது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் மாணவரின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை தேவியை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவர் தற்போது குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர்
தற்போது சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை





