பார்கிங் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் 1913-ல் புகார் செய்யுங்கள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

பெருநகர சென்னை மாநகராட்சி, சீர்மிகு நகர சிறப்பு திட்டத்தின்படி வாகன நிறுத்த மேலாண்மையில் ஒப்பந்த அடிப்படையில் வாகன நிறுத்தம் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனம் மூலம் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன
நிறுத்தத்திற்கான இடங்களை கண்டறிந்து, தனியார் சேவை நிறுவனத்தின் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டணமாக 4-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20/- எனவும், 2-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5/- எனவும், தியாகராய நகரில்
உள்ள பன்னெடுக்கு வாகன நிறுத்தம் உட்பட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பாண்டி பஜார் சாலையில், வாகனம் நிறுத்தத்திற்கு சிறப்பு கட்டணமாக 4-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.60/- எனவும், 2-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15/-எனவும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டண வரம்பைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும், @chennaicorp என்ற X வலைதளத்திலும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யலாம் என
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய

பார்கிங் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் 1913-ல் புகார் செய்யுங்கள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய