அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலின கிளப் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி….

உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “சென்னை மாநகர
கூட்டமைப்பு திட்டம்” மற்றும் இந்திய அரசின் “நிர்பயா” திட்டங்களின் கீழ்
இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு
அரசின் மூலம் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” (Gender and Policy
Lab) உருவாக்கப்பட்டு மேயர் 01.04.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பாலினநிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது பல துறைகளுடன்
ஒருங்கிணைந்து கூட்டு அணுகு முறையின் மூலம் நிர்பயா திட்டத்தினை
கண்காணிக்கவும், இதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கவும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஏற்றதாகவும் மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வளர்ப்பதை கொண்ட பாலின கிளப் (Gender Club) என்ற பாடத்திட்டம் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்துடன் (Gender and Policy Lab) இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பாலின கிளப் திட்டமானது பள்ளி மாணவர்களை பாலின பேதமின்றி
ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்தவும், ஏற்றுக் கொள்ளவும், ஊக்குவிக்கும்
நோக்கத்தைக் கொண்டது. மேலும், மாணவர்களின் பாலின பேதமில்லா மனப்பான்மை,
அவர்களின் எதிர்கால இலட்சியம் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை
ஏற்படுத்தும். பாலின சமத்துவ உணர்வை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கும்,
ஆரோக்கியமான வகுப்பறை சூழலை மேம்படுத்துவதற்கும் பாலின கிளப் திட்டமானது
பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாலின சங்கத்தின் (Gender Club) பாடத்திட்டமானது, இணைந்து செயல்படுதல்
மற்றும் ஈடுபடுத்துதல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், செயல்பாடுகள்,
விவாதங்கள் மற்றும் நிஜ வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளைக் கொண்டது. பாலின
கிளப் மூலம் தற்போதைய பாலின பண்புகள், பாலினம் சார்ந்த எதிர்பாப்புகளை
அலசுதல், இன்றைய கலாச்சாரம் மற்றும் ஆரோக்கியமான எல்லைகள் என்றால் என்ன?
போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் விவாதிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கிளப்பானது, தரமான கல்வியின் இன்றியமையாத அம்சமாக மாணவர்களின்
எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பள்ளி மேலாண்மை கூட்டங்களின் போது பாலின சமத்துவம் சார்ந்த
தலைப்புகளில் பெற்றோர்களை ஈடுபடுத்தவும், மாணவர்களின் படைப்புகளை பள்ளி
அளவிலான கண்காட்சி நடத்தி வெளிப்படுத்தவும் கூடுதலாக இந்த ஆண்டு
பாடத்திட்டத்தில் பாலின கிளப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகமானது, சென்னை பள்ளிகளில் பாலின கிளப் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 23.06.2023, 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது குறித்த பயிற்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியானது, ஆசிரியர்களுக்கு பாடங்களை வழங்குவதற்கும், விவாதங்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கும் உதவும். மேலும், பள்ளிகளில் பாலின கிளப் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தப் பயிற்சி உதவும்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

பாலின கிளப் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி….

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை