புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:
சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார். அப்போது, இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இதில் புதிய திட்டங்களைக் கொண்டு வந்ததை விட, முந்தைய அரசு கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி, நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம், ஓசூர் டைடல் பார்க், ஓசூர் நாலேஜ் பார்க் மற்றும் மாமல்லன் நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தவெக ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டு இருக்கிறது.
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு ஒழுங்கு சீராக இல்லை. கடந்த காலத்தில் குற்ற நிகழ்வுகளுக்கு அரசு காரணம் என கூறிய கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு தனி நபர்கள்தான் காரணம் என மக்களுக்கு பாடமெடுக்கின்றனர். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் இதுவரை 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆளுங்கட்சி நிர்வாகிகள் பிரைட்டர் மற்றும் ரூஸ்வெல்ட் ஆகிய இருவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் புகார் அளித்தபோதிலும், அரசு இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளரான வேம்புலி என்பவர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான போதிலும், சில நாட்களிலேயே வெளியே வந்து சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டுள்ளார். மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து, நான்கு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
ஆர்கே நகர் 43-வது வார்டு பொறுப்பாளரான பாம்பு தினேஷ் என்பவர் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டியதாக ஆளுங்கட்சிப் பிரமுகர் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் (என்கிற குட்டி) மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ளார். பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளுங்கட்சி நிர்வாகிகள் மகாராஜா, ராபின், ஹரிஷ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஒன்றியச் செயலாளர் ரமேஷ் மீது புகார், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளுங்கட்சி நிர்வாகி கண்ணன் மீது புகார் என்று கட்சியினர் மீதான குற்ற வழக்குகள் நீண்டுகொண்டே செல்கின்றனர்.
ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்தில், பெண்களுக்கெதிராக ஆளுங்கட்சியினரே புரிந்த அநீதிகளும் அத்துமீறல்களும் நீண்ட பட்டியலாக நீண்டு கொண்டே போவதாகச் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றம்ச்சாட்டினார்.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் மரணங்கள் தொடர்பாக பேசிய முதலமைச்சர் சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார். ஆனால் இந்த ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கு நீதியும் இல்லை சாரியும் இல்லை.
இந்தச் சம்பவங்களில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை; முதலமைச்சரிடமிருந்து குறைந்தபட்ச மன்னிப்போ அல்லது வருத்தமோ கூடத் தெரிவிக்கப்படவில்லை.எம்பிஆர் நகர் வெங்கடேசன், தென்காசி மாவட்டம் திருக்கதிரேசன், தூத்துக்குடி அருணாச்சலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த பூசாரி பரமசிவம் ஆகியோர் காவல் நிலையங்களில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (என்ற மாரியப்பன்), காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.மேலும், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி சபரிவர்மன், சேலையைச் சேர்ந்த பாலாஜி, மதுரைச் சிறையில் அன்வர்தீன் உள்ளிட்டோரும் உயிரிழந்துள்ளனர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய