இன்று மேயர் ஆர்.பிரியா தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரும் நடவடிக்கைகள் குறித்தும் வங்ககடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலா்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுகூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமை செயலாளர்/ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா இணை ஆணையாளர் (பணிகள்), ஜி.எஸ்.சமீரன் மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






