போதை கும்பலிடம் போலீசார் கொடுத்த தகவலாலேயே அமுதன் கொலை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
போதை பொருள் கும்பலால் மாணவர் அமுதன் கொலை செய்தது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் நடைபெற்றது. இதில் அமுதன் கொலை தொடர்பாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போதை பொருள் கும்பலால் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசாரே அந்த கும்பலிடம் அமுதன் புகார் அளித்ததாக கூறியதாலேயே இந்த கொலை நடந்துள்ளது. சட்டசபையில் நாங்கள் கேள்வி கேட்டால் எங்கள் மீதே குற்றம்சாட்டுகின்றனர். எந்த துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில் துறை அமைச்சர் இருக்கிறார். ஆனால் அவர் பேசவில்லை. அவர் இல்லாததுபோல் உள்ளது.
போதை பொருள் பயன்படுத்திய அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்தாரா? தமிழகத்தில் போதை பொருள் ஒழிப்பில் ஓராண்டுகள் சிறப்பாக பணியாற்றியதாக காவலர்களுக்கு முதல்வர் விருது வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில்தான் இவர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அப்படி என்றால் இது எங்களுக்குத்தானே பெருமை என்றார்.

திருவொற்றியூரில் கும்பல் தாக்கி மாணவன் சாவு; விசாரிக்க சென்ற அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை:சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்

போதை கும்பலிடம் போலீசார் கொடுத்த தகவலாலேயே அமுதன் கொலை: உதயநிதி ஸ்டாலின்

திருவொற்றியூரில் கும்பல் தாக்கி மாணவன் சாவு; விசாரிக்க சென்ற அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை:சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்