மல்லி ஒரு கிலோ ரூ.1000 – விவசாயிகள் மகிழ்ச்சி…..

இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,000க்கும் விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இல்லத்தரசிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.180க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.

கனகாம்பரம் ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.700க்கும், காமந்தி ரூ.260க்கும், சமங்கி ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும், அரளி ரூ.250க்கும் விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் 1 கிலோ மல்லி ரூ.1,200க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சாமந்தி ரூ.300க்கும், சம்பங்கி ரூ.220க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், அரளி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்காக உள்ளது. இருப்பினும் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. அதிக விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் பூக்கள் கிடைக்காமல் மக்கள் தத்தளித்தனர்’ என்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதனால் அனைத்து பூக்களும் விரைவில் விற்று விட்டது. சில பேர் பூக்கள் கிடைக்காமல் தத்தளித்தனர். ஆடி மாதம் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’ என்றார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மல்லி ஒரு கிலோ ரூ.1000 – விவசாயிகள் மகிழ்ச்சி…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட