பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்போம் ஆந்திர முதல்வர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டம்…

“நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் அவசியம்” என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக மற்றும் மத அமைப்புகள் தம் கருத்துகளை ஜூலை 14 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்து இருந்ததாக சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்தக் கருத்து கேட்பு கடந்த 14 ஆம் தேதி அன்று நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க மேலும் இரண்டு வார கால அவகாசத்தை சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. பொது சிவில் சட்டத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், நடந்து கொண்டிருக்கின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் பொது சிவில் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள், தாடேப்பள்ளியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். அதில் அவர்கள், பொது சிவில் சட்டத்திற்கு தாங்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “உங்கள் உரிமைகள் மற்றும் மனதை பாதிக்கும் வகையில் இந்த அரசு ஒருபோதும் செயல்படாது. இஸ்லாமியர் சமூகத்தினருக்கு எங்கள் ஆட்சி எப்போதும் துணையாக இருக்கும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சட்ட மேலவையின் முன்னாள் தலைவர் ஷெரிப் தலைமையில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவைச் சந்தித்து, பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அவரது ஆதரவைத் தருமாறு வலியுறுத்தினர். அந்தச் சந்திப்பில் சந்திரபாபு, “நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரான பொது சிவில் சட்டத்தில் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்போம் ஆந்திர முதல்வர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டம்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.