மாநாட்டின் மூலம் பலத்தை நிரூபிப்பாரா ஓ.பி.எஸ்…?

சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமி விஸ்வரூபம் எடுத்து கட்சி மொத்தத்தையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விட்டார். அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாட்டை கூட்டி இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம் . இந்த மாநாட்டின் மூலம் அதிமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களை தன் பக்கம் இழுத்து தன் பலத்தை காட்ட நினைக்கிறார்.
இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மருது அழகுராஜ் தனது வலைத்தள பக்கத்தில், ‘திருச்சி பொன்மலையும் தீச்சுவாலை எரிமலையும்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
உனக்கும்
எனக்கும்
புரட்சித் தலைவர் தந்த
உரிமையை பறித்து..
ஒன்றரைக் கோடி
தொண்டர்கள்
உயிராக
துதிக்கும்
புரட்சித் தலைவி
அம்மாவை
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்தே நீக்கி..
மக்கள் திலகமும்
மகராசி
தாயும்
கையெழுத்திட்ட
உறுப்பினர்
அட்டைகள்
செல்லாதென
மிரட்டி
அம்மா
அடையாளம்
காட்டிய
கழகத்தின்
பரதனாம்
அண்ணன்
ஓ.பி.எஸ்ஸை
அவமானப் படுத்தி..
சாதிமத
பேதமில்லா
சமத்துவ
இயக்கத்தை
சாதிக்குள்
அடைத்து..
கோலமகள்
வாசம் செய்த
கொடநாடு
கோவிலில்
கொலை கொள்ளை
நடத்தி..
பச்சிலையாம்
ரெட்டை இலையை
தொடர்
தோல்வியில்
ஆழ்த்தி
எடப்பாடி
பல்லுச்
சாமியும்
அவரது
எடுபிடிகளும்
நடத்துகிற
அரசியல்
அபகரிப்பை
அடியோடு
முறியடிக்க
கழகமே
உலகமென
வாழும்
மூவர்ண
இயக்கத்தின்
மூச்சான
தொண்டர்களே..

காவேரிக்
கரைக்கு
கடலெனவே
திரண்டு வாரீர்
ஒன்றரைக் கோடி
தொண்டர்களின்
உரிமை
காக்க..

ஒப்பில்லா
தாய் தந்த
தப்பில்லா
தங்க மகன்
ஓ.பி.எஸ்
அழைக்கிறார்.

எரிமலையாய்
வெடிப்போம்
எடப்பாடி சதிவலையை
தகர்ப்போம்
என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை நிர்ணயிக்க முடியும் என்று அரசியல் வட்டாரங்கள், விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அழைத்தால் வருவேன்…

இந்த மாநாராட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தால் வருவேன் என்று சசிகலா கூறியிருக்கிறார். சசிகலாவிற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்துசட்டப் பேராட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியிருந்தார். இதனால் சசிகலாவுக்கு அவர் அழைப்பு விடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிற வகையில் அழைப்புவிடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

மாநாட்டின் மூலம் பலத்தை நிரூபிப்பாரா ஓ.பி.எஸ்…?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத