மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக முதல்வரிடம் ரூ.5 கோடி வழங்கினார் கலாநிதி மாறன்

சென்னை:
‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்று வழங்கினார்.

‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களில் சன் குழுமம் மக்களின் துயரை போக்கும் வகையில் உதவி செய்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் நிதியுதவி செய்து வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரிடர் ஏற்பட்டபோதும், சன் குழுமம் நிதி வழங்கியது. சுனாமி ஏற்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சன் குழுமம் சார்பில் ரூ.5.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது ரூ.1 கோடி வழங்கியது. கொரோனா காலத்தில் கர்நாடகா மாநிலத்துக்காக அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் சன் குழும செயல் இயக்குநர் காவேரி கலாநிதிமாறன் ரூ.3 கோடி வழங்கினார். கஜா புயல் வீசியபோது ரூ.2 கோடி வழங்கப்பட்டது.

அதேபோல, கார்கில் போரின்போது சினிமா துறையுடன் இணைந்து நிதி திரட்டி ஒன்றிய அரசிடம் நிதியை வழங்கியது. கொரோனா காலகட்டத்தில் ரூ.30 கோடி நிதி வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ரூ.10 கோடி நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமம் வழங்கியது. இதுமட்டுமல்லாமல், சன் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆண்டுதோரும் வழங்கி வருகிறது. காதுகேளாதோர், இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள், கண் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் சிறுவர்கள், பெண்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சன் குழுமம் பல கோடி ரூபாய் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக முதல்வரிடம் ரூ.5 கோடி வழங்கினார் கலாநிதி மாறன்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்