முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில்
த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
12 வருடமாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை
14 நாட்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு தவெகவில் அங்கீகாரம்
என வேதனை
…….
சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 50 பேர் கட்சியிலிருந்து விலகி
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
மாவட்ட செயலாளர் மா சுப்பிரமணியன் அவர்களை திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்.
தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வட்ட நிர்வாகி சந்தோஷ் அளித்த பேட்டி
2014 ஆம் ஆண்டில் இருந்து நானும் எனது நண்பர்களும் விஜய் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தில் பயணித்து வந்தோம்.
ஆனால் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை
14 நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மதிப்பு மரியாதை ,முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனவேதான் உழைப்புக்கேற்ற மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தோம்
என்றார்.







