ரூ.14.43 கோடி மதிப்புள்ள 23.34 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.14.43 கோடி மதிப்புள்ள 23.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், ஆட்டோவில் ஏறி புறப்பட்டார். பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் ரூ.8.28 கோடி மதிப்புள்ள 13.28 கிலோ தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவர் சொன்ன தகவலின்படி, கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.6.15 கோடி மதிப்புடைய 10.06 கிலோ எடையிலான தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இருவரிடம் இருந்தும் ரூ.14.43 கோடிமதிப்புள்ள 23.34 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

ரூ.14.43 கோடி மதிப்புள்ள 23.34 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்