சென்னை:
சென்னையில் வரும் 5ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்டா மாவட்டத்தை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அடுத்தபடியாக தென் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






