சென்னை:
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை சென்னை மாவட்ட சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், சென்னை சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று வண்ணார் மக்கள் பயன்பெற 272 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த அடுக்கு மாடி வீட்டிற்கு தலா ஒரு நபருக்கு ரூபாய் 3 லட்சத்து 13 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தொகையை எங்களால் கட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. எனவே வீட்டுக்கான தொகையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும், சென்னை மாநகராட்சி 10வது மண்டல குழு தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தியிடமும், த.நா.ந.மே.வாரிய அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம்.
இதையடுத்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். எனவே நமது மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






