சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், அம்பேத்கர் போன்ற மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் ஆணையை திரும்பப் பெற வேண்டும் எனறு தனது கண்டனத்தை வை.கோ தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





