கீவ்:
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. ஓராண்டை கடந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை அளிப்பதால் ரஷ்யாவிற்கு கடும் சவாலை போரில் அளித்து வருகிறது. உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை இந்தியாவும் செய்து வரும் நிலையில், கூடுதல் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியுள்ளார்.







