இனி ஒரே வாகனத்தில் ஆணும் பெண்ணும் பயணிக்க கூடாது என்கிற உத்தரவு அமல்

ஜாகரத்தா:
இந்தோனேசிய மாகாணம் ஒன்றில், ஆண் – பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற விநோத உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் ஆச்சே என்கிற மாகாணம் உள்ளது. இங்கு உலகளவில் இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகினற்னர். மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள பிராந்தியம் என்ற வகையிலும் ஆச்சேவுக்கு உலகப் பிரபலம் உண்டு.
இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில், தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு விநோத சட்டங்கள் அமலில் இருக்கின்றன. சூதாட்டம், மது அருந்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவு உள்ளிட்டவை இவற்றில் சேரும்.
இந்த வரிசையில் தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் – பெண் ஆகியோர் ஒன்றாக வாகனப் பயணம் செய்வதற்கான தடையும் சேர்ந்திருக்கிறது. தங்களது வாகனப் பயணங்களை ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாகனங்களில் ஈஷிக்கொண்டு செல்லும் ஜோடிகளை கட்டுப்படுத்த இயலும் என ஆச்சே மாகாணம் முடிவெடுத்துள்ளது.
இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆச்சே மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆச்சே மாகாணத்தின் ஒரு சில மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த இந்த கட்டுப்பாடு தற்போது, மாகாணம் முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

இனி ஒரே வாகனத்தில் ஆணும் பெண்ணும் பயணிக்க கூடாது என்கிற உத்தரவு அமல்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி